வாலிப வயசு!!! - 1

0
  • Monday, January 2, 2012
  • Unknown
  • Labels:
  • டேய் சிவா, காத கொண்டாடா இங்க!

    எதுக்கு? நீ லொள்ளு புடிச்சவன் போன முறை
    இதே மாதிரி சொல்லி எங்காதுல கத்தின.

    "இல்லடா சீரியஸ் மேட்டர்"

    எதுவா இருந்தாலும் க்ளாஸ் முடிஞ்சதும் பேசிக்கலாம்

    அதுக்கு முன்னாடியே பேச வேண்டிய மேட்டர்டா.
    காத கொண்டா இங்க!

    நேத்து "உள்ளத்தை அள்ளித்தா" படம்
    பார்த்தேண்டா மச்சி..

    அடச்சீ இதுவாடா சீரியஸ் மேட்டர்.

    இல்லடா அதில ரம்பாவ மடக்கறத்துக்கு
    கார்த்திக் சூப்பர் ஐடியா போடுவாரு. கவுண்டமணிய
    விட்டு ஹேண்ட்பேக் திருடிட்டு ஓடுற மாதிரியும்
    கார்த்திக் அதை ஓடிப்போய் புடுங்கற மாதிரியும்
    அதன் மூலமா ரம்பாவ காதல் வலையில
    சிக்க வைக்கிறது. அதே மாதிரி நான் ஒரு ஐடியா
    போட்டு வச்சிருக்கேன். அது மாட்டும் கரெக்டா
    ஒர்கவுட் ஆச்சின்னா சாந்தி எனக்குதான்.

    அதுக்கு நான் என்னடா பண்றது?

    இன்னும் அரை மணி நேரத்தில க்ளாஸ் முடிஞ்சுரும்.
    முடிஞ்ச உடனே என்னோட சைக்கிள எடுத்துகிட்டு
    ஏரியை தாண்டி இருக்குற மொத அரசமரத்தடியில
    நின்னுக்கோ!

    நின்னு!

    சொல்றத முழுசா கேளுடா..

    சொல்லு..

    சரியா பத்தாவது நிமிஷத்தில சாந்தி வருவா
    அவகிட்ட நான் சொல்லிக்குடுக்கற "ரெண்டு
    வரி "டயலாக்" சொல்ற அத சொன்னதும் அவ
    அழுவாள் அது மூலமா அவள் என்னை லவ்
    பண்றாளான்னு தெரிஞ்சிக்கலாம். அப்படியே
    என்னை லவ் பண்ணலன்னாலும் அந்த
    டயலாக் கேட்டதுக்கப்புறம் என்னை தான்
    லவ் பண்ணுவா பாரேன்.

    டேய் உனக்குதான் ராமாயி இருக்கால்ல, பின்ன
    ஏண்டா சாந்தி பின்னாடி சுத்தற!

    ராமாயி, பேராடா அது! ஆளும் அவ மூஞ்சியும்
    மொகம்பூரா மஞ்சள் பூசிக்கிட்டு, நாலணா சைசுக்கு
    சாந்து பொட்டு வச்சிக்கிட்டு ம்ஹீம் சகிக்கலைடா.

    "பெயரில் என்ன இருக்கிறது நண்பா?"

    அந்த கதைய நாங்க அஞ்சாவது படிக்கும்போதே
    படிச்சுட்டேம். இப்போ மேட்டருக்கு வாங்க தொர!

    அது என்ன 'டயலாக்' சொல்லித்தொலை..

    அவகிட்ட போயி என்ன சொல்றன்னா, நான் உன்ன
    ரொம்ப நாளா லவ் பண்ணிகிட்டு இருக்கேன், நீ
    என்னடான்னா அந்த பாபுப்பயல பாத்துகிட்டு
    இருக்கே (அதாவது என்னை) அப்படின்னு சொல்லு.
    அதுக்கு அவ சொல்லுவா ஆமா அவனத்தான் லவ்
    பண்ணுவேன் உனக்கென்ன அப்படின்னு. நாலு
    வார்த்தை நீ கோவத்தில பேசணும் அத கேட்டதும்
    அவ அழுவாள் அந்த நேரத்தில கரெக்டா நான்
    வருவேன். அவ அழுதுகிட்டு இருக்கறத பாத்து
    உன்னை நாலு அடி அடிச்சி விரட்டற மாதிரி நடிச்சு
    அவளுக்கு ஆறுதல் சொல்லுவேன். இதான் மச்சி
    ப்ளான்.

    நீங்க பறக்க நாங்க பஞ்சராகனுமா?

    டேய் மச்சி ரெண்டாவது அரச மரத்தடியில
    அவங்கப்பன் கள்ளுக்கடை வச்சிருக்கான்
    தெரியும்ல..

    தெரியும்டா, அந்த மரத்துக்கும், இந்த மரத்துக்கும்
    ரொம்ப தூரம், யாரும் இருக்க மாட்டாங்க மச்சி
    தைரியமா இரு.

    எனக்காக இதக்கூட செய்ய மாட்டியா மச்சி?

    உடனே பாசக்கயிறு வீசிறிவிங்களே..

    டேய் உனக்கு கணக்கு சரியா வரலன்னு உங்க
    அப்பா நினைச்சிகிட்டு இருக்காரு.ஆனா நீ போடற
    கணக்கு உங்கப்பனுக்கும் தெரியாது, அதோ அங்க
    போர்டுல கிறுக்கிட்டு இருக்கானே அவனுக்கும்
    புரியாது!

    ஏய் அங்க யாருடா ரெண்டு பேர் குசுகுசுன்னு
    பேசிகிட்டு இருக்கறது?, அப்படியே ரெண்டு
    பேரும் எந்திரிச்சி வெளிய போயிடுங்க. என்னோட
    க்ளாசுக்கே வராதிங்கடா.

    வசதியா போச்சு, சிவா எந்திரிடா போலாம்.

    இந்தா சாவிய புடி. சீக்கிரம் போ. நான் பல்லு
    சைக்கிள வாங்கினு வரேன்.

    இவன் வேற தைரியமா சொல்லுடான்னு சொல்லிட்டான்
    நம்ம நேரம் அவ செருப்பாலே அடிச்சிட்டான்னா
    நாளப்பின்ன பள்ளிக்கூடம் பக்கமே தலை காட்ட
    முடியாதே. ச்சே அப்படியெல்லாம் அடிக்க மாட்டா,
    அப்படியே அடிச்சாலும் நாளைக்கு ஸ்கூலுபக்கம்
    வந்துற முடியுமா? வயித்தக் கலக்குதுடான்னு
    அவ வர்ற நேரமா பாத்து எஸ்கேப் ஆயிறலாமா?
    அய்யயோ அவ வேற வராளே, என்ன செய்யிறது
    எப்படியாவது சொல்லிற வேண்டியதுதான்.

    வேகமா சைக்கிள்ல வந்து எதிர்ல சரக்குன்னு
    நிறுத்தினதும் பயந்துதான் போனா அவ.

    ஏ புள்ள, சாந்தி கொஞ்சம் நில்லு உங்கிட்ட
    கொஞ்சம் பேசணும்.

    என்ன பேசணும்?

    நான் உன்ன எவ்வளவு நாளா பாத்துகிட்டும் லவ்
    பண்ணிகிட்டும் இருக்கேன். நீ என்னடான்னா
    அந்த பாபுப்பயல லவ் பண்ணிகிட்டு இருக்கியாமே.
    அவன் கொஞ்சம் கூட நல்லவன் இல்ல.

    ஏய், ஏய் ஏன் அழுவற யாராவது பாத்தா தப்பா
    நினைப்பாங்க. எஸ்கேப் ஆயிடலாமா?

    அழுகைய நிறுத்து சாந்தி!!

    எந்த நாயி சொல்லுச்சி பாபுவ நான் லவ் பண்றேன்னு?
    நான் உங்களத்தான் லவ் பண்றேன் சிவா...

    அடிப்பாவி, இப்படியா குண்ட தூக்கிப்போடுவ,
    அவனுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்.
    அவன் வேற அதோ வந்துகிட்டு இருக்கானே.

    சரி நீ கெளம்பு! அவன் வந்துகிட்டு இருக்கான்.

    ஏண்டா நான் வர்றதுக்குள்ள அவள அனுப்பின?

    அவ கெடக்கறா விடுறா, இவ இல்லன்னா வேற
    ஆளே இல்லியா?

    சிவா அவ என்ன சொன்னான்னு சொல்டா
    மொத்தல்ல!

    அவள மறந்துடு மச்சி!

    ஏன்?

    அவளுக்கு நிச்சயம் ஆகிடுச்சாம், அவ மாமங்கூட.
    பரிட்சை முடிஞ்ச உடனே கல்யாணமாம்.

    அப்புறம் எதுக்கு ஸ்கூலுக்கு வர்றாளாம். ச்சே
    என்னடா இது, இந்த ஓல சந்தில எட்டி பாத்தவன்
    தட்டி கட்டினவன் எல்லாம் அடிச்சி விரட்டணும்
    மச்சி.

    உனக்கு ராமாயிதான்!

    0 comments:

    Post a Comment

     
    Copyright 2010 Online